மருதனார்மடம் கொத்தணியில் கொரோனாத் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேசத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுவதற...
மருதனார்மடம் கொத்தணியில் கொரோனாத் தொற்றுக்கள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் உடுவில் பிரதேசத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் மூடப்படுவதற்கான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
சற்று முன்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். பாடசாலைகளை மூடுவது தொடர்பில் வலயக்கல்வித் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதேவேளை மருதனார்மடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் பிசிஆர் முடிவுகளின் விபரங்கள் இன்று மாலையே வெளியிடப்பட்டும் என்று தெரிவித்த அவர்,
யாழ்ப்பாணத்தின் ஏனைய பொதுச் சந்தைகளிலும் உள்ளவர்கள் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.