யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம்...
யாழ்ப்பாணம் மருத்துவ பீடத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் பொதுச்சந்தையில் இன்று சேகரிக்கப்பட்ட 110 மாதிரிகளுக்கான பரிசோதனையின் போதே இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உடுவில் மற்றும் மானிப்பாய் பகுதியை சேர்ந்தவர்களுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் பரிசோதனை செய்யப்பட்ட ஏனையவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.