கேகாலை மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டு இன்னும் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்படாத கொரோனா பானத்தின் பரிசோதனையை கைதிகள் ஊடாக நட...
கேகாலை மருத்துவரால் கண்டுபிடிக்கப்பட்டு இன்னும் அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அனுமதிக்கப்படாத கொரோனா பானத்தின் பரிசோதனையை கைதிகள் ஊடாக நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்கிறவரால் இந்த பானம் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும் அரசாங்கம் இதுவரை இப்பானத்தினை உத்தியோகபூர்வமாக மக்களுக்கு வழங்க அறிவிக்கவில்லை.
இந்நிலையில் அதனை பரிசோதிப்பதற்காக சிறைக் கைதிகளில் கொரோனா தொற்று இலக்காகியவர்களுக்கு வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்திருப்பதாக அறியமுடிகின்றது. இதற்கு கொரோனா ஒழிப்பு படையணியும் இணங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு இலக்காகியிருந்த 21 பொலிஸ் அதிகாரிகளுக்கு இந்தப் பானம் பருக வழங்கிவைக்கப்பட்ட நிலையில் அவர்களில் 14 பேர் பூரண சுகமடைந்திருப்பதாகவும் தெரியவருகின்றது.