புரேவி சூறாவளியின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் நல்லூரில் பெய்த கடும் மழையால் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. குறிப்பாக நல்லூர் அரசடி வீதி...
புரேவி சூறாவளியின் தாக்கத்தினால் யாழ்ப்பாணம் நல்லூரில் பெய்த கடும் மழையால் பல வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.
குறிப்பாக நல்லூர் அரசடி வீதியின் குறுக்கு ஒழுங்கைகள் பல நீரில் மூழ்கியுள்ளதுடன், குறித்த ஒழுங்கைப் பகுதிகளில் காணப்படுகின்ற பல வீடுகளுக்குள் நீர் தேங்கிக் காணப்படுகிறது.
இதேவேளை யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் நல்லூர் வீரகாளி அம்மன் ஆலயத்திற்கு நெருக்கமாக உள்ள மரம் ஒன்று முறிந்து வீழ்ந்தமையால் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் அதனை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.