நல்லூர் பிரதேச சபை மற்றும் யாழ் மாநகர சபை ஆட்சி அமைப்பது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை ...
நல்லூர் பிரதேச சபை மற்றும் யாழ் மாநகர சபை ஆட்சி அமைப்பது தொடர்பில் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் இருந்த நல்லூர் பிரதேச சபை மற்றும் யாழ் மாநகர சபை ஆகியன இரண்டாவது தடவையாகவும் பெரும்பான்மைக் கோரம் இன்மையால் 2021 ஆம் ஆண்டுக்கான பாதீடு தோற்கடிக்கப்பட்டது.
இந்நிலையில் 14 நாட்களுக்குள் குறித்த சபைகளில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் தமது அணியிலிருந்து நல்லூர் பிரதேச சபைக்கு தவிசாளர் ஒருவரையும் யாழ் மாநகர சபைக்கு முதல்வர் ஒருவரையும் பெரும்பான்மை பலத்துடன் நியமிக்க வேண்டும்.
இவ்வாறான நிலையில் குறித்த விடயம் தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது தான் கொழும்பில் இருந்து வந்ததும் குறித்த விடயங்கள் தொடர்பில் காட்சிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.