அரசாங்கத்தின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் இத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 10 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாகத் தரம் ...
அரசாங்கத்தின் 1000 பாடசாலைகளை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தும் இத்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்டத்தில் 10 பாடசாலைகள் தேசியப் பாடசாலைகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.
நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் அவர்களின் முயற்சி மற்றும் பரிந்துரையின் கீழ் 10 பாடசாலைகள் தரமுயர்த்தப்பட்டன.
நெடுந்தீவு மகா வித்தியாலயம்,வேலணை மத்திய கல்லூரி, ஊர்காவற்றுறை சென். அந்தோனியார் கல்லூரி, காரைநகர் இந்துக் கல்லூரி, வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி, தெல்லிப்பளை யூனியன் கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி, புத்தூர் ஸ்ரீ சோமஸ்கந்தா கல்லூரி , மெதடிஸ்த பெண்கள் உயர்தர பாடசாலை மற்றும் உடுத்துறை மகா வித்தியாலயம் ஆகியன இவ்வாறு தரமுயர்த்தப்பட்டுள்ளது.