உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் நான்கு மாணவர்களின் உடல்நிலை மோசமடைகின்றதென யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா...
உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடும் நான்கு மாணவர்களின் உடல்நிலை மோசமடைகின்றதென யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார்.
இன்று அதிகாலை 3 மணியளவில் மாணவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபடும் பகுதிக்கு மருத்துவ குழுவினருடன் வருகைந்த அவர் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டவர்களை பரிசோதித்தார்.
இதன் பின்னர் கருத்து தெரிவித்த வைத்தியர் யமுனாநந்தா, நான்கு மாணவர்களின் நிலை மோசமாக உள்ளதென தெரிவித்தார். மாணவர்களின் உடலில் குளுக்கோசின் அளவு குறைந்து வருகிறதெனவும், தொடர்ந்து இவர்கள் உணவுத் தவிர்ப்பில் ஈடுபடுவது உடல்ரீதியாக மிகப்பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
யாழ் பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டமையை தொடர்ந்து மாணவர்கள் உணவுத் தவிர்ப்பில் மூன்றாவது நாளாக ஈடுபட்டு வருகின்றனர்.