எதிர்வரும் திங்கட்கிழமை (18ஆம் திகதி) முதல் நாடளாவிய ரீதியி்ல வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்து...
எதிர்வரும் திங்கட்கிழமை (18ஆம் திகதி) முதல் நாடளாவிய ரீதியி்ல வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவரான கெமுனு விஜேரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச தரப்பினருக்காக உழைத்துவரும் சிலருக்கு பஸ் போக்குவரத்து அனுமதிச்சீட்டு வழங்குதல் மற்றும் கொரோனா கால நிவாரணங்கள் வந்துகிடைக்காமை போன்ற விடயங்களை முன்வைத்தே வேலைநிறுத்தம் நடத்த தீர்மானித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.