நேற்று யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சீறிசற்குணராஜாவை சந்தித்த மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம், அவர் சில விடயங்களை தெரிவித்துள்ளார். இது...
நேற்று யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் சீறிசற்குணராஜாவை சந்தித்த மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளிடம், அவர் சில விடயங்களை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் அசம்பாவிதங்களை தடுப்பதற்கு மானியங்கள் ஆணைக்குழுவால் ஐந்து பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாகவும். அவர்களின் பாதுகாப்பிற்காக விசேட அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டதாக துணைவேந்தர் தெரிவித்தார்.
மாணவர்களின் கோரிக்கைகளை நான் ஏற்கின்றேன். மாணவர்களை விரைவில் சந்திப்பேன். அனுமதி இல்லாமல் கட்டப்பட்டதாலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடிக்கப்பட்டது. அதனால் அனுமதி பெற்று அதனை மீள நானே முன் நின்று நடாத்துவேன் என்றார்.
கல்விச் செயற்பாடுகளை செவ்வாய்க்கிழமை முதல் ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளதாக துணைவேந்தர் தெரிவித்ததாக, மாணவ ஒன்றிய பிரதிநிதிகள் தெரிவித்தனர்.