யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியிலுள்ள பிரபல சைவ உணவகம் இன்றைய தினம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. அங்கு கடமையாற்றிய 11 ஊழியர்களு...
யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியிலுள்ள பிரபல சைவ உணவகம் இன்றைய தினம் சுகாதாரப் பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டது. அங்கு கடமையாற்றிய 11 ஊழியர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்
பருத்தித்துறை புலோலியில் கொரோனா தொற்றுக்குள்ளான நபர் கடந்த 31ஆம் திகதி குறித்த உணவகத்திற்கு வந்து சென்றதன் அடிப்படையில் குறித்த கடையினை சுகாதாரப் பிரிவினர் இன்றைய தினம் தனிமைப்படுத்தியதோடு அங்கு கடமையாற்றிய ஊழியர்கள் 11 பேரையும் அவர்களின் குடும்பத்தினருடன் தனிமைப் படுத்தியுள்ளார்கள்.