கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளை பிரிப்பதற்கான மக்கள் அபிப்பிராய நடவடிக்கைகளே இடம்பெற்று வருவதாக வலி கிழக்...
கோப்பாய் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளை பிரிப்பதற்கான மக்கள் அபிப்பிராய நடவடிக்கைகளே இடம்பெற்று வருவதாக வலி கிழக்கு கோப்பாய் பிரதேச செயலாளர் திருமதி சுபாஷினி மதியழகன் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமை கோப்பாய் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி கலந்துரையாடல் சிவில் அமைப்புப் பிரதிநிதி ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குகே அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் கோப்பாய் பிரதேச செயலகத்தை இரண்டாகப் பிரிப்பதற்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் கிராம சேவையாளர் பிரிவுகளை அதிகரிக்கா விட்டால் பிரதேச செயலகத்தை இரண்டாக்க முடியாது.
அதற்காக பொதுமக்களின் அபிப்பிராயத்தை அறிந்துகொள்ளும் வகையில் பிரதேச ரீதியாக ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவுகள் பொதுமக்களின் அபிப்பிராயங்களை அறிவதற்கான வேலைத்திட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
இந்நிலையில் சில கிராம சேவையாளர் பிரிவுகள் பிரிப்பதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் சில கிராம சேவையாளர் பிரிவுகள் விருப்பம் இல்லாத நிலையும் காணப்படுகின்றது.
ஆகவே தற்போது இடம்பெற்றுவரும் விடையம்மக்களுக்காக மக்கள் தமது விருப்பங்களை தெரிவிக்கும் முடியுமே தவிர இறுதி முடிவு அல்ல என அவர் மேலும் தெரிவித்தார்.