யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்கைச் செய்கையாளர்கள் நடுகை செய்த பின்னரே அரசாங்க மானியம் வழங்க முடியும் என யாழ் மாவட்ட பணிப்பாளர் திருமதி கைலேஸ...
யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்கைச் செய்கையாளர்கள் நடுகை செய்த பின்னரே அரசாங்க மானியம் வழங்க முடியும் என யாழ் மாவட்ட பணிப்பாளர் திருமதி கைலேஸ்வரன் தெரிவித்துள்ளார்
யாழ் மாவட்டத்தில் கோப்பாய் தெல்லிப்பளை மற்றும் உடுவில் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் அதிகளவு விவசாயிகள் உருளைக்கிழங்கை நடுகை செய்து வருகிறார்கள்.
அவர்களின் நடுகை முழுமை பெறாத காரணத்தினால் சரியான விவரங்களை மானியத்துக்காக பரிந்துரைக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
ஆகவே இம்மாத இறுதிக்குள் அனைத்து உருளைக்கிழங்கு செய்கையாளர்களும் நடுகையை முடிப்பார்கள் என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.