பெரும் எழுத்து இயக்கமாக செயற்பட்ட டொமினிக் ஜீவா, இன்று (28) தனது 94வது வயதில் காலமானார். இடதுசாரி கொள்கையை வரித்துக் கொண்டு சமூக விடுதலையை ம...
இடதுசாரி கொள்கையை வரித்துக் கொண்டு சமூக விடுதலையை முன்னிறுத்தி பல தசாப்தங்களாக எழுத்தாளராகவும், வெளியீட்டாளராகவும் செயற்பட்டார்.
1940களில் இருந்து எழுத்து துறையில் இயங்கிய ஜீவா, ஈழ இலக்கியத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாவார்.
தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள், அனுபவ முத்திரைகள், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம் உள்ளிட்ட பல நூல்களை வெளியிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்டிருந்த ஜீவா, கடந்த சில தசாப்தங்களாக கொழும்பில் வசித்து வந்தார்.
டொமினிக் ஜீவா (1927.06.27 - ) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த எழுத்தாளர், இதழாசிரியர். இவரது தந்தை ஆவுறம்பிள்ளை, தாய் யோசப் மரியம்மா. இவர் மல்லிகை என்னும் சஞ்சிகையின் ஆசிரியராவார். புரட்சிமோகன் என்ற புனைபெயரில் ஆக்கங்களைப் படைத்துள்ளார்.
இவர் தண்ணீரும் கண்ணீரும், பாதுகை, சாலையின் திருப்பம், வாழ்வின் தரிசனங்கள், டொமினிக் ஜீவா சிறுகதைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் அனுபவ முத்திரைகள், எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம், அச்சுத்தாளினூடாக ஓர் அனுபவ பயணம், நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள், முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள் ஆகிய கட்டுரைத் தொகுப்புக்களையும் UNDRAWN PORTRAIT FOR UNWRITTEN POETRY என்ற மொழிபெயர்ப்பு நூலையும் எழுதியுள்ளார்.