யாழ் வலிகாமம் பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் பாலியல் துன்புறுத...
யாழ் வலிகாமம் பகுதி பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் மீது அதே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆண் ஆசிரியர்கள் சிலரால் பாலியல் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவிக்கும் நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வலிகாம பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தரம் 11 சேர்ந்த ஆண் மாணவர்களை மாணவர்களின் சம்மதமின்றி வலுக்கட்டாயமாக உடலில் பச்சை குத்தியதை பார்வையிட வேண்டும் என கூறி 70 மேற்பட்ட மாணவர்களை பாடசாலையின் தனியான ஓர் இடத்திற்கு ஆசிரியர்களால் அழைத்துச் செல்லப்பட்டு அவர்களின் ஆடைகள் களையப்பட்டு பார்வையிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனேகமான மாணவர்கள் பாடசாலை செல்லாத நிலையில் அங்கு கல்வி கற்பிக்கும் பெண் ஆசிரியர்களை குறித்த மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி மீண்டும் பாடசாலையில் இணைத்துள்ளனர்.
இச்சம்பவத்தால் தாம் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்து முறைப்பாட்டாளர் ஊடாக தமது கோரிக்கை கடிதத்தை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.