யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனின் உத்தரவின் அடிப்படையில் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் அவர்களின் மேற்பார்வையில் யாழ் தனியார் ...
யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணனின் உத்தரவின் அடிப்படையில் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் அவர்களின் மேற்பார்வையில் யாழ் தனியார் பேருந்து நிலைய மொழிப்பிரச்சினை
(தமிழுக்கு முதலிடம்,எழுத்துப்பிழை) இன்று முழுமையாக தீர்க்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடப் பலகையில் தமிழ்மொழி முதலாவதாக மாற்றும் பணி மாநகர சபையினால் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையத்தின் தரிப்பிடம் புதிதாக அமைக்கப்பட்டு அண்மையில் திறந்துவைக்கப்பட்டது.
அங்கு ஒவ்வொரு மாவட்ட பேருந்துகள் தரித்து நிற்கும் இடங்களைக் குறிக்கும் காட்சிப் பலகைகளில் சிங்கள மொழி முதலிலும் தமிழ்மொழி இரண்டாவதாகவும் இடம்பெற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
அதுதொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரின் அறிவுறுத்தலில் உள்ளூர் அச்சகம் ஒன்றின் ஊடாக தரிப்பிடப் பலகைகளை சீர்செய்ய சபையினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தரிப்பிட பலகையில் தமிழ்மொழி முதலிலும் சிங்கள மொழி இரண்டாவதாகும் இடம்பெறும் வகையில் சீரமைக்கப்பட்டு இன்று அவை பொருத்தப்பட்டது.