நுவரெலிய மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஜே.ஸ்ரீரங்காவின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலான த...
நுவரெலிய மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பிரஜைகள் முன்னணியின் செயலாளர் நாயகமுமான ஜே.ஸ்ரீரங்காவின் அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பிலான தகவல்கள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் தனது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்து, கிழக்கு மாகாணத்தில் தனது அரசியலை தொடர்வதற்கு ஜே.ஸ்ரீரங்கா தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
ஜே.ஸ்ரீரங்கா, கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அடிக்கடி விஜயம் மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று,
கிழக்கு மாகாணத்திலுள்ள ஊடகவியலாளர்களுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.