யாழ்.முத்திரச்சந்தி செம்மணி வீதியில் போதையில் இளைஞர்கள் நின்று அந்த வீதியில் செல்லும் மக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக அச்சம் தெரிவிக்கின்ற...
யாழ்.முத்திரச்சந்தி செம்மணி வீதியில் போதையில் இளைஞர்கள் நின்று அந்த வீதியில் செல்லும் மக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாக அச்சம் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் (09) பிற்பகல் 2.30 மணியளவில் குறிப்பிட்ட வீதி வழியே சென்று வந்த பயணிகளிடம் போதையில் நின்ற இளைஞர்கள் சிலர் வழிமறித்து பணம் கேட்டும் கொடுக்க மறுத்தவர்களை மிரட்டியும் விட்டனர்.
இதன் காரணமாக அந்த இடத்தில் பதற்றம் ஏற்பட்டது. அங்கு நின்ற ஓட்டோ சாரதிகள் அவர்களை அந்த இடத்தில் இருந்து விரட்டியதாகவும் போதையில் நின்ற இளைஞர்கள் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் என்றும் போதைப் பொருள்களை பயன்படுத்தியிருப்பது அவர்களின் முகத்தில் தெரிந்தது என்றும் சம்பவத்தை பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தில் இளைஞர்கள் போதைப் பழக்கத்துக்கு ஆளாகி வருவது அதிகரித்து வருவதாகவும் இதனை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட தரப்பினர் எடுக்கும் நடவடிக்கை போதுமானதாகவும் இல்லை என்றும் இதனால் தான் இப்படியான சம்பவங்கள் இடம்பெறுவதாகவும் மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.