கடந்த சனிக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பண்ணாகத்தில் பதினாறு பவுண் நகையும் ஐயாயிரம் ரூபா பணமும் களவாடப்பட்டுள்ளது...
கடந்த சனிக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுழிபுரம் பண்ணாகத்தில் பதினாறு பவுண் நகையும் ஐயாயிரம் ரூபா பணமும் களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த வீட்டு உரிமையாளர் கொல்லங்கலட்டிக்கு தோட்ட வேலைக்கு சென்றுள்ள நிலையில் வீட்டு கதவினை உடைத்து குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.