யாழ் இந்துசமய பேரவையின் ஒழுங்குபடுத்தலில் இந்துக்கள் சமய எதிர்கால வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலும் கொரோனா இடர்கால பெருந்தொற்றின் போது உதவ...
யாழ் இந்துசமய பேரவையின் ஒழுங்குபடுத்தலில் இந்துக்கள் சமய எதிர்கால வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலும் கொரோனா இடர்கால பெருந்தொற்றின் போது உதவிய ஆலய அறங்காவலர்களுக்கான கருத்தரங்கும் கௌரவிப்பு நிகழ்வும் நேற்று யாழ் இந்துசமய பேரவையின் தலைவர் ஈசான சிவசக்தி கிரீவன் தலைமையில் இந்துசமயப் பேரவையின் நடராஜர் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்துசமய பேரவை தலைவர் ஈசான சிவசக்தி கிரீவன் கருத்து தெரிவிக்கையில், கீரிமலை நகுலேச்சர ஆலயம், மாவட்டபுர கந்தசாமி கோவில், கருங்கல்லில் கோவில் அமைக்கவேண்டும். மக்கள் அனைவரும் நகுலேச்சரத்தை காக்க வேண்டும்
பணம் படைத்த ஒருசிலர் நகுலேச்சர ஆலயத்தை சுற்றி காணிகளை அபகரிக்க முனைகின்றனர். நகுலேச்சர ஆலயத்திற்க்கு சொந்தமான காணிகளில் மடங்கள் அமைத்தவர்கள் ஆலயத்திற்கே திரும்பி வழங்க வேண்டும். நகுலேச்சர ஆலயத்தை சுற்றியுள்ள வளாகம் நகுலேச்சர பெருமானுக்கே சொந்தமானது அதனை மறந்து யாரும் செயற்படக்கூடாது என தெரிவித்தார்.
அரசமரம் இருக்கின்ற இடத்திலே புத்த விகாரை அமைக்க வேண்டும் என பௌத்த மதத்தவர் எண்ணுகிறார்கள்! உண்மையில் புத்த பெருமான் ஒரு இந்து மத ஞானி அரசமரத்தை இந்துக்கள் சிவன்பெருமான் ஆக வணங்குகின்றனர்!
இவ்வாறான எண்ணம் பௌத்த தர்மம் அல்ல என ஈசான சிவசக்தி கிரீவன் தெரிவித்திருந்தார்!
இந்நிகழ்வில் இந்துசமய பேரவை தலைவர் ஈசான சிவசக்தி கிரீன், நல்லை ஆதீனம் சிறீலசிறி பரமாசார்யசுவாமி, ராஜராஜ சிறி கு.நகுலேச்சரகுருக்கள், இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் கிரியா திலகம் சிவசிறி கு.ஜெகதீஸ்வர குருக்கள், பேராசிரியர் சண்முகதாஸ், கலாசார உத்தியோகத்தர், ஆலயநிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.