யாழ்.அரியாலையில் உள்ள தியாகி நாய்கள் காப்பகத்துக்கு எதிராக முகப்புத்தகத்தில் வந்த விமர்சனத்தால் இனிமேல் நாய்களை தான் பொறுப்பேற்க மாட்டேன் என...
யாழ்.அரியாலையில் உள்ள தியாகி நாய்கள் காப்பகத்துக்கு எதிராக முகப்புத்தகத்தில் வந்த விமர்சனத்தால் இனிமேல் நாய்களை தான் பொறுப்பேற்க மாட்டேன் என்று காப்பகத்தின் உரிமையாளர் வாமதேவன் தியாகேந்திரன் அறிவித்துள்ளார்.
அவர் இது சம்பந்தமாக மேலும் தெரிவிக்கும் போது
அவதூறான குற்றச்சாட்டை வேண்டுமென்றே எனது காப்பகத்தின் மீது சுமத்தியுள்ளார். அதாவது காப்பகத்தில் உள்ள நாய்கள் பசியில் இறப்பதாகவும். இது கொலை எனவும் தனது முகப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளார்.
காப்பகத்தை பராமரிப்பதற்காக மாதாந்தம் இலட்ச ரூபாய்களை நான் செலவு செய்கிறேன். பணியாளர்களையும் பணியில் அமர்த்தியுள்ளேன். யாழ்ப்பாண வீதிகளில் உள்ள கைவிடப்பட்ட நாய்களை இந்த காப்பகத்தில் கொண்டு வந்து பராமரிப்பதற்காக இந்த காப்பகத்தை திறந்தேன். ஆனால் இவரின் இந்த விமர்சனம் என்னை மிகவும் மனவேதனைக்கு உள்ளாக்கி இருப்பதால் காப்பகத்துக்கு மேலதிகமாக நாய்களை எடுப்பதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளேன்.
விமர்சனம் செய்தவர் ஒருவராக இருக்கலாம். ஆனால் அவர் காப்பகம் மீது செய்த அதாவது பசியால் நாய்கள் சாகிறது என்ற விமர்சனம் என்னால் ஏற்க முடியாதுள்ளது. ஒருவரின் விமர்சனத்துக்காக காப்பகத்தில் நாய்களை எடுப்பதை நிறுத்துவதா என்று யாரும் கேட்கலாம் ஆனால் விமர்சனம் செய்தவர் கைவிடப்பட்ட நாய்களை பராமரிக்கும் திறன் இருக்குமா? இருக்குமாயின் வரவேற்கத்தக்கது என்றார்.