தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த கொரோனா தொற்றாளர் ஒருவர், அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தம்புள்ளை பொலிஸார்...
தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவந்த கொரோனா தொற்றாளர் ஒருவர், அங்கிருந்து தப்பியோடியுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு தப்பிச்சென்ற நபர் யாசகர் ஒருவர் என்றும் அவரை தேடிக் கண்டுபிடிக்க விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபரின் வதிவிடம் தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாகவும், இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.