யாழ் மாவட்ட கொவிட் செயலணியின் தீர்மானத்தை மீறி யாழில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் இடம்பெற்றுள்ளது. யாழ் நகரப...
யாழ் மாவட்ட கொவிட் செயலணியின் தீர்மானத்தை மீறி யாழில் நேற்றைய தினம் திங்கட்கிழமை உயர்தர மாணவர்களுக்கான பரீட்சைகள் இடம்பெற்றுள்ளது.
யாழ் நகரப்பகுதியில் கோபி தாக்கம் அதிகரித்துள்ளதால் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ் மாவட்ட செயலகத்தில் கூடிய கொவிட் செயலணி யாழ் வலயப் பாடசாலைகள் அனைத்தையும் மூடுமாறு தீர்மானம் எடுத்தது.
இந்நிலையில் குறித்த தீர்மானத்தை மீறும் வகையில் யாழின் இரு பிரபல கல்லூரிகளில் தொண்டமானாறு வெளிக்கள நிலையம் நடாத்தும் பரீட்சைகள் இடம்பெற்றன.
இதன் காரணமாக குறித்த பரீட்சைக்கு செல்வது தொடர்பில் மாணவர்களிடையே குழப்பநிலை ஏற்பட்டதுடன் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட குடும்பங்களில் உள்ள மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றும் வாய்ப்பு கிடைக்காமல் போனது.
குறித்த விடயம் தொடர்பில் வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரனை தொடர்பு கொண்டபோது குறித்த விடயம் தொடர்பில் தனக்கு ஏதும் தெரியாது எனவும் கல்வி அமைச்சிடம் குறித்த விடயம் தொடர்பில் கேட்குமாறு பதிலளித்தார்.