புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படுகின்ற விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு அதிகாரிகளிடம் முன்னனுமதி பெறப்பட வேண்டும் என்று காவற்துறையினர் தெரிவி...
புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்படுகின்ற விழாக்கள் மற்றும் நிகழ்வுகளுக்கு அதிகாரிகளிடம் முன்னனுமதி பெறப்பட வேண்டும் என்று காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டங்கள் விழாக்கள் மற்றும் நிகழ்வுகள் என்பன கொவிட் பரவல் தீவிர நிலைக்கருதி தடை செய்யப்பட்டிருந்தன.
அதற்கு உரிய அனுமதிகளை சுகாதாரத்துறை மற்றும் காவற்துறை அதிகாரிகளிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, காவற்துறை ஊடகப்பேச்சாளர், பிரதி காவற்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
அதேநேரம் இவ்வாறான நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்ற முகாமைத்தரப்பினர், கட்டாயமாக சுகாதார அறிவுறுத்தல்களை கடைபிடித்து அமுலாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.