வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மழை வீழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர...
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் 17ஆம் திகதி வரை மழை வீழ்ச்சி கிடைக்க வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு மாகாணத்தில் பொதுவாக காலை வேளைகளில் வெப்பமான காலநிலை நிலவுகின்றது.
இலங்கையின் வளிமண்டலத்தின் கீழ் காற்றழுத்த தாழ்வு நிலை காணப்படுவதால் மாலை நேரங்களில் இடி அல்லது இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி தொடர்ச்சியாக கிடைக்கப் பெற வாய்ப்புள்ளது.
இடி மின்னல் ஏற்படும்போது மக்கள் பாதுகாப்பான வழிமுறைகளை பின்பற்றுவதோடு மற்றவர்களுக்கும் அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.
இக்காலப் பகுதியில் பெய்யும் மழையினை மேற்காவுகை மழை அல்லது வெப்பச் சரணமழை என அழைக்கப்பார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.