தென்மராட்சி மிருசுவில் பகுதியில் 40 ஏக்கர் காணியில் அமைந்துள்ள படை முகாம் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று (5) நடைபெ...
தென்மராட்சி மிருசுவில் பகுதியில் 40 ஏக்கர் காணியில் அமைந்துள்ள படை முகாம் காணியை நிரந்தரமாக சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று (5) நடைபெறவுள்ளன.
இந்த காணி உரிமையாளர் என தெரிவிக்கும் பெண்மணி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த போதும், அவர் காணி உரிமையாளர் அல்லவென தீர்ப்பளிக்கப்பட்டதாகவும், அதை தொடர்ந்தே இன்று அளவீட்டு பணிகள் நடைபெறவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.