தனது மகனின் பிறந்தநாள் நிகழ்வில், போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதான சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியை உள்ளிட்ட 15 பேரும் ப...
தனது மகனின் பிறந்தநாள் நிகழ்வில், போதைப்பொருளை பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் கைதான சர்வதேச பாடசாலையொன்றின் ஆசிரியை உள்ளிட்ட 15 பேரும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் ட்ரூ சிலோனுக்கு தெரிவித்தனர்.
கொழும்பு – பாமன்கடை பகுதியிலுள்ள இரண்டு மாடி வீடொன்றி;ல பி
றந்த நாள் நிகழ்வுகளை நடத்திய வேளையில், வெள்ளவத்தை பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், ஆசிரியையின் இரண்டு மகன்மாரும் அடங்குவதாக பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து 15 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 2.50 மில்லிகிராம் கஞ்சா போதைப்பொருளும், ஐஸ் போதைப்பொருளை பயன்படுத்தும் உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன.
இளைஞர், யுவதிகள் இணைந்து, நடத்திவரும் பிறந்தநாள் நிகழ்வொன்றில் சட்டவிரோத போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக கிடைக்கப் பெற்ற முறைபாடொன்றை அடிப்படையாகக் கொண்டே பொலிஸார் இந்த சுற்றி வளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் சிலர் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், 42 வயதான ஆசிரியை மற்றும் 18 முதல் 23 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர், யுவதிகள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட அனைத்து இளைஞர், யுவதிகளும், கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலுள்ள சர்வதேச பாடசாலைகளில் கல்வி பயில்வோர் என தெரிய வருகின்றது.
இந்த நிலையில், சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், 250,000 ரூபா வீதமான சரீர பிணையில் கீழ் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணைகளில் எதிர்வரும் மே மாதம் 13ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்