கொவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தீர்மானம் கிடைக்க பெறும் வரை, கடந்த ஜனவரி மாதம் 11ம் திகதி முதல் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின் கீழ் ...
கொவிட் தடுப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தீர்மானம் கிடைக்க பெறும் வரை, கடந்த ஜனவரி மாதம் 11ம் திகதி முதல் பின்பற்றப்பட்ட நடைமுறைகளின் கீழ் பாடசாலைகள் தொடந்தும் நடத்தப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.
கொவிட் பரவலுக்கு மத்தியில், நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை மூடாது, பிரதேச கொவிட் நிலைமைகளின் பிரகாரம், பாடசாலை அதிபர்களின் தீர்மானத்திற்கு அமைய, பாடசாலைகளை நடத்துவது குறித்து தீர்மானம் எட்டப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.