யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். குறித்த சம்மவம் இன்று காலை...
யாழ். வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த சம்மவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மணல் கடத்திவந்த கும்பலை கடற்படையினர் வழிமறித்தபோது கடற்படையினர் மீது மோத முயற்சித்ததுடன் கடத்தல்காரர்கள் தப்பி ஓட முயன்றுள்ளனர்.
இதனையடுத்து கடத்தல் கும்பல் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டையடுத்து டிப்பர் வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை கைவிட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர்.