தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ...
தடை செய்யப்பட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புக்களின் சொத்துக்களை அரசுடமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
அந்தந்த அமைப்புக்களின் தலைவர்களிடம் தற்போது சொத்துக்கள் தொடர்பிலான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் இயங்கும் 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடை விதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் கடந்த 13ம் திகதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையிலேயே, சரத் வீரசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
குறித்த அமைப்புக்களின் தலைவர்களிடம் இந்த விடயம் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த அமைப்புக்களின் சொத்து விபரங்கள் மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின்னர், அந்த சொத்துக்களை அரசுடமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.