யாழ்.கொடிகாமம் - பாலாவி காட்டு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். ...
யாழ்.கொடிகாமம் - பாலாவி காட்டு பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடத்தை முற்றுகையிட்ட இராணுவம் கடத்தல்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
சம்பவத்தில் கடத்தல்காரர்கள் தப்பி ஓடியுள்ளதுடன், உழவு இயந்திரம் சேதமடைந்த நிலையில் மீட்கப்பட்டு கொடிகாமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்தில் இராணுவம் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக கூறப்படுகின்றது.