நான் தமிழ் மக்களுக்கு எதிரானவனா..? ஒருபோதும் இல்லை, யாழ்.மருதங்கேணியில் அமைச்சர் சரத் வீரசேகர ..

நான் தமிழ் மக்களுக்கு எதிரானவனா..? ஒருபோதும் இல்லை, யாழ்.மருதங்கேணியில் அமைச்சர் சரத் வீரசேகர ..

மாகாணசபை முறமையை எதிர்க்கும் நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல. என பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, சீ.வி.விக்னேஸ்வர...

மாகாணசபை முறமையை எதிர்க்கும் நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல. என பொதுமக்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர, சீ.வி.விக்னேஸ்வரன் தனது மாகாணத்திற்கு மத்திய அரசாங்கம் கொடுத்த நிதியில் பெரும் பகுதியை திரும்பவும் திறைசோிக்கு கொடுத்திருக்கிறார். 


ஆகவே மாகாணசபை என்பது தேவையற்ற ஒன்று. அது இந்தியாவால் எங்கள் மீது திணக்கப்பட்டது. அதனை நான் அன்றும் எதிர்த்தேன், இன்றும் எதிர்க்கிறேன், நாளையும் எதிர்ப்பேன். ஆனால் நான்  தமிழ் மக்களுக்கு எதிரான ஒருவன் அல்ல. எனவும் அமைச்சர் சரத் வீரசேகர மேலும் கூறியுள்ளார். 

யாழ்.மருதங்கேணி பகுதிக்கான புதிய பொலிஸ் நிலைய திறப்பு விழாவில் கலந்துகொண்டு கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், இன்று வடக்கில் இரண்டு பொலிஸ் நிலையங்களை திறந்துவைப்பதற்காக நான் வந்துள்ளேன் மல்லாவி மற்றும் மருதங்கேணி பகுதிகளில் 

பொலிஸ் நிலையங்களை திறந்திருக்கிறேன் தற்பொழுது நாடுபூராகவும் 494 பொலிஸ் நிலையங்கள் காணப்படுகின்றன். அதற்கு மேலதிகமாக இன்னும் 190 பொலிஸ் நிலையங்களை புதிதாக அமைக்க உள்ளோம். அந்த வேலைத் திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் வடபகுதியில் இரண்டு புதிய பொலிஸ் நிலையங்கள் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளன 

அத்தோடு பொதுமக்கள் தூர இடங்களுக்குச் சென்று தமது பொலிஸ் சேவையினை பெற்றுக் கொள்வதை நிறித்த இதனை செய்துள்ளோம் தற்பொழுது நான் பொதுமக்களிடம் உரையாடும் போது பொதுமக்கள் தமது பிரச்சினை கூறும் போது இந்த பிரச்சனை எனக்கு கூறினார்கள் அதற்கு ஒரு தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 

வடமராட்சி கிழக்கு பகுதியில்சட்டவிரோத மணல் கடத்தல் தொடர்பில் பல குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் இங்கே வேலையில்லாப் பிரச்சினை தான் இந்த மணல் கடத்தலுக்கு காரணமாக இருக்கின்றது. எனவே கல்வி கற்று வேலையற்றுள்ளோர் மற்றும் இதன் காரணமாக கல்வியினை இடையே நிறுத்தி வேலையில்லாத உள்ளோருக்கு 

வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதன் மூலம் இந்த சட்டவிரோத மணல் கடத்தலை தடுத்து நிறுத்த முடியும் இங்கே உள்ள இளைஞர் யுவதிகளுக்கான வேலை வாய்ப்பினை வழங்குமிடத்து வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் சட்டவிரோத மணல் கடத்தலை கட்டுப்படுத்த முடியும் எனவே டக்லஸ் அமைச்சருடன் இணைந்து இந்த பகுதியில் இளைஞர் யுவதிகளுக்கு 

வேலைவாய்ப்பினை வழங்கு வதற்காக நான் யோசித்துள்ளேன் அத்தோடு அவ்வாறு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவதன் மூலம் அந்த இளைஞர் யுவதிகள் சட்டவிரோத செயற்பாட்டில ஈடுபடமாட்டார்கள் எனினும் அவ்வாறு சட்டவிரோதமான மணல் கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளேன். 

அத்தோடு புங்குடுதீவு பகுதியில் வெகு விரைவில் புதிதாக பொலிஸ் நிலையம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது இன்று ஆரம்பித்து இருக்கின்ற வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமைக்கப்படும்.மாகாண சபை முறைக்கு சரத் வீரசேகர ஆகிய நான் எதிரானவன் அன்றும் எதிர்த்தேன் இன்றும் எதிர்க்கிறேன் நாளையும் அதே கருத்தை தான் கொண்டுள்ளேன் 

அது இந்தியாவால் எமக்கு பலவந்தமாக திணிக்கப்பட்ட ஒன்று மாகாண சபைமுறைமை என்பது ஒரு தேவையற்ற ஒரு விடயமாகும் ஒன்பது மாகாணசபைகள் காணப்படும்போது அந்த 9 மாகாண சபைக்கும் தனியான நிர்வாகம் காணப்படும் மத்திய அரசு என்பது தனியாக செயற்பட வேண்டி வரும் ஆனால் மத்திய அரசாங்கம் என்பது ஒன்று தான். 

ஒன்பது மாகாணத்திற்கும் தனியான நிர்வாகம் இருக்க முடியாது ஆனால் அரசாங்கம் மாகாணசபை முறை வேண்டும் என தீர்மானிக்குமானால் அந்த தீர்மானத்தினை நான் எதிர்க்கப் போவதில்லைஇந்த பிரதேசத்தில் மாகாணசபை இல்லாது போய் கடந்து மூன்று வருஷம் ஆகிவிட்டது தற்பொழுது அபிவிருத்தி தடைப்பட்டுள்ளது 

ஆனால் கடந்தமுறை ஆட்சியில் இருந்த முதலமைச்சர் விக்னேஸ்வரன் மத்தியஅரசாங்கத்தால் அபிவிருத்திக்கென ஒதுக்கப்பட்ட நிதியில் அரைவாசி நிதியினை பயன்படுத்தாது திறை சேரிக்கு திருப்பி அனுப்பியுள்ளார். இந்த நிலைமைதான் இங்கே காணப்படுகின்றது ஆகவே மாகாண சபை என்பது மக்களுக்கு பிரயோசனமான ஒரு விடயமாக அமைய வேண்டும். 

எனினும் வடக்கு மக்கள் மாகாண சபையினை விரும்புகின்றார்கள் அது ஒரு அரசியல் காரணமாக இருக்கலாம் ஆனால் சரத் வீரசேகர ஆகிய நான் தனிப்பட்ட ரீதியில் மாகாணசபை முறைமைக்கு எதிரானவன்ஆனால் அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த தீர்மானித்தால் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு ஏற்றவாறு 

நான் செயற்படத் தயாராக உள்ளேன் எனினும் நான் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல அரசாங்கம் மாகாண சபைத் தேர்தலை நடத்த விரும்பினால் அதை நடத்தலாம் ஆனால் தனிப்பட்ட ரீதியில் நான் மாகாண சபைக்கு எதிரானவன் என்றார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3321,lanka,8611,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4214,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: நான் தமிழ் மக்களுக்கு எதிரானவனா..? ஒருபோதும் இல்லை, யாழ்.மருதங்கேணியில் அமைச்சர் சரத் வீரசேகர ..
நான் தமிழ் மக்களுக்கு எதிரானவனா..? ஒருபோதும் இல்லை, யாழ்.மருதங்கேணியில் அமைச்சர் சரத் வீரசேகர ..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiw9jJAXCk5j7FJ-J1W_gWvZ4vsCDs_gE5Cr1ZxKmeAYcZr-qFT2sjTKC0w3C5TFINdbpF8tFWh-lZTQ-PYEixG_KXyv8Bqtj6ij59LThHgaly_qXU1AeNUH2vQK38ZqnmW1yy55gYPWE/w559-h419/20210402_152015.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiiw9jJAXCk5j7FJ-J1W_gWvZ4vsCDs_gE5Cr1ZxKmeAYcZr-qFT2sjTKC0w3C5TFINdbpF8tFWh-lZTQ-PYEixG_KXyv8Bqtj6ij59LThHgaly_qXU1AeNUH2vQK38ZqnmW1yy55gYPWE/s72-w559-c-h419/20210402_152015.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2021/04/blog-post_97.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2021/04/blog-post_97.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content