3 மாவட்டங்களுக்கு சொந்தமான 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். ...
3 மாவட்டங்களுக்கு சொந்தமான 9 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார்.
யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 9 பகுதிகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பளை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்மடு கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
மொனராகலை மாவட்டத்தின் கிரிவெவ, செவகல, பஹிராவ, ஹபரத்தனவெல, ஹபருகல, மஹகம, இதிகொலபலேஸ, கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.