மஹரகம − பமுனுவ பகுதி நேற்று (05) அதிகாலை முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சித்திரை புத்தாண்டு காலப...
மஹரகம − பமுனுவ பகுதி நேற்று (05) அதிகாலை முதல் மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் ஆடை கொள்வனவிற்காக பமுனுவ பகுதிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகைத் தந்திருந்தனர்.
இந்த நிலையில், சித்திரை புத்தாண்டு காலப் பகுதியில் ஏற்பட்ட கொவிட் கொத்தணி, மஹரகம பகுதியிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், மஹரகம பகுதியின் அச்சுறுத்தல் மிக்க இடங்களை தனிமைப்படுத்த சுகாதார தரப்பினர் நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இவ்வாறான நிலையில், பமுனுவ பகுதியில் கடந்த ஏப்ரல் மாதமும், நேற்றைய தினமும் எடுக்கப்பட்ட இரு படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன.