வற்றாப்பளை உற்சவத்தில் நிர்வாகத்தினருக்கு மட்டும் அனுமதி.. ஆலயச் சூழலில் பாதுப்பு கடமையில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழையுங்கள்.. சுகாதார வைத்தி...
வற்றாப்பளை உற்சவத்தில் நிர்வாகத்தினருக்கு மட்டும் அனுமதி.. ஆலயச் சூழலில் பாதுப்பு கடமையில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழையுங்கள்.. சுகாதார வைத்திய அதிகாரி மு. உமாசங்கர் வேண்டுகோள்..
ஆரம்பமாகியுள்ள வற்றாப்பளை கண்ணகிஅம்மன் ஆலய உற்சவத்தில் ஆலய நிர்வாகத்தினருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என முல்லைத்தீவு மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் தெரிவித்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளன உடல்நிலை காரணமாக வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவத்தை மட்டுப்பாடுகளுடன் நடாத்துவதற்கு ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையில் ஆலயத்துக்கு தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்வு சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மிகவும் எளிமையான முறையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை முல்லைத்தீவு ஆடைத் தொழிற்சாலையில் நடத்தப்பட்ட அன்னியன் பரிசோதனையில் அதிகளவிலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் பிசிஆர் பரிசோதனை செய்த ஆலய நிர்வாகத்தினர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்படும் நிலையில் வர்த்தகர்களோ அடியார்களே ஆலயச் சூழலில் கூட நடமாட அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஆகவே பொதுமக்கள் ஆலயச் சூழலில் கடமையில் ஈடுபடும் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொதுச் சுகாதாரத் தரப்பினருக்கு போதிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.