பூநகரி சங்குப்பிட்டியில் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் கடந்த வருடம் இந்து அமைப்பொன்றினால் பிள்ளையார் சி...
பூநகரி சங்குப்பிட்டியில் மூவாயிரம் ஆண்டுகள் பழைமையான பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த இடத்தில் கடந்த வருடம் இந்து அமைப்பொன்றினால் பிள்ளையார் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பூநகரி பிரதேச செயலகப் பிரிவில் கடமையாற்றும் அரச அதிகாரி ஒருவரின் அழுத்தத்தால் குறித்த பிள்ளையார் எடுத்துச் செல்லப்பட்டு வேறோர் இடத்தில் வீசப்பட்டிருந்தது.
இந்தநிலையில் சில தினங்களுக்கு முன்னர் அதே இடத்தில் மீண்டும் பிள்ளையார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தது.
ஆனால் கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகாரத்தில் இருக்கும் கிறிஸ்தவ உயர் அதிகாரிகள் மீண்டும் தமது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அறியக் கிடைத்துள்ளது.
பூநகரி பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச சபையினருக்கு குறித்த பிள்ளையாரை அகற்றும் வண்ணம் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக அறியக்கிடைத்துள்ளது.
கிளிநொச்சி நகரில் மாத்திரம் பத்திற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ அடையாள சிலைகள் எந்தவித அனுமதியுமின்றி அமைக்கப்பட்டுள்ளது.
அதற்கு குறித்த மாவட்ட உயர் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் பழைமை வாய்ந்த பிள்ளையார் ஆலயம் அமைவதை தடுப்பது எவ்விதத்தில் நியாயம் எனப் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.
அதிகாரி மதங்களுக்கு எதிராக இனி வருங்காலங்களில் செய்யப்படுவாராயின் அவரது கடந்தகால செயற்பாடுகள் தொடர்பில் பகிரங்கப் படுத்த வேண்டிய நிலை ஏற்படும்.
.