எஸ்.எல்.ரி-மொபிரல் நிறுவனத்தினால் கொவிட்19 இடர்காலத்திற்கான நிவாரணப் பொருட்கள் இன்று சண்டிலிப்பாய் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்டது. நிரந்...
எஸ்.எல்.ரி-மொபிரல் நிறுவனத்தினால் கொவிட்19 இடர்காலத்திற்கான நிவாரணப் பொருட்கள் இன்று சண்டிலிப்பாய் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்டது.
நிரந்தர வருமானமற்ற வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 90 குடும்பங்களை சேர்ந்தவர்களின் விபரங்கள்அரச அதிபரூடாக பெறப்பட்டு இந்த நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஜே/141,ஜே/144 கிராம சேவகர் பிரிவில் வசிக்கும் 90 குடும்பங்களுக்கு தலா 2000 பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் யாழ் பொலிஸ் அத்தியட்சகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலர்
மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
கிராம சேவகர் மற்றும் யாழ் மாவட்ட எஸ்.எல்.ரி-மொபிரல் முகாமையாளர், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.