இணைய வழியாக மதுபானங்களை இன்று முதல் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கலால் வரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் M.J.கு...
இணைய வழியாக மதுபானங்களை இன்று முதல் கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கலால் வரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் M.J.குணசிறி தெரிவிக்கின்றார்.
இந்த திட்டத்திற்கு நிதி அமைச்சு அனுமதி வழங்கியுள்ள நிலையில், கொவிட்−19 தடுப்புக்கான செயலணி இன்று அனுமதி வழங்கும் என அவர் கூறியுள்ளார்.
இணையவழியாக மதுபானங்களை விநியோகிக்க மற்றும் கொள்வனவு செய்ய 10திற்கும் அதிகமான நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவிக்கின்றார்.
வெளிநாட்டு மதுபானம் 12 லீற்றர், பியர் 12 லீற்றர் மற்றும் உள்நாட்டு உற்பத்தியிலான மதுபானம் 5 லீற்றர் மாத்திரமே அதிகளவில் நபரொருவரினால் ஒரு தடவையில் கொள்வனவு செய்ய முடியும் என அவர் கூறுகின்றார்.