யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாடு பூராகவும் கொரோனா வைர...
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் காவல்துறை மற்றும் இராணுவத்தினரால் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு பூராகவும் கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் பயணத்தடை அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் யாழ் குடாநாட்டில் பயணத் தடையினை மீறி வீதிகளால் அதிகமானோர் பயணிப்பதை கட்டுப்படுத்தும் முகமாக யாழ்ப்பாண காவல்துறையினரால் தொடர்ந்து விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.