சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் கையூட்டல் பெற முயன்ற இராணுவ வீரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சி...
சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் கையூட்டல் பெற முயன்ற இராணுவ வீரர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன்படி, சிலாபம் – மையக்குளம் பகுதியில் கஞ்சா மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவரிடம் கப்பம் கோரிய இரண்டு இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இருவரும் 15,000 ரூபா கையூட்டலை பெற முற்பட்டபோதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேநேரம், சீதுவை பகுதியில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட ஒருவரிடம் இருந்து கையூட்டல் பெறமுயன்ற இராணுவ வீரர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சுமார் 80,000 ரூபாவை கையூட்டலாக பெற முனைந்த போது கைதானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கைது செய்யப்பட்ட இராணுவ வீரர்கள் மூவரையும் பணிநீக்கம் செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அதிரடியாக தெரிவித்துள்ளார்.