இசை நிகழ்ச்சிகளை மண்டபத்திற்குள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 50 வீதமானோரின் பங்குப்பற்றுதலுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, இசை ...
இசை நிகழ்ச்சிகளை மண்டபத்திற்குள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
50 வீதமானோரின் பங்குப்பற்றுதலுடன் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, இசை நிகழ்ச்சிகளை நடத்த முடியும் என சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிறுவர் பூங்காக்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் பரவல் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றது.