அரியாலை கிழக்கு காரைமுனங்கு இந்து மயானத்திற்கு இன்று நேரடியாக சென்று நிலைமைகள் தொடர்பாக பார்வையிட்ட யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மண...
அரியாலை கிழக்கு காரைமுனங்கு இந்து மயானத்திற்கு இன்று நேரடியாக சென்று நிலைமைகள் தொடர்பாக பார்வையிட்ட யாழ் மாநகர சபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் இதுவரை நல்லூர் பிரதேச சபையினால் எடுக்கப்பட்ட அபிவிருத்தி நடவடிக்கை தொடர்பாகவும் இனி நடைபெறவுள்ள நடவடிக்கை தொடர்பாகவும் நல்லூர் பிரதேச சபை தவிசளாரின் கேட்டறிந்தார்.
இதன் போது குறித்த மயானம் தான் பதவி எற்ற பின்னர் மக்கள் மழை மற்றும் வெயிலுக்கு மத்தியிலும் இறுதி கிரிகைகள் செய்வதற்கு எதுவாக ஒரு மண்டபம் கட்டப்பட்டு குறித்த இடத்திற்கு பாதுகாப்பாக சுற்று மதில் அமைக்கப்பட்டு வருவதாகவும் அருகில் கடல் இருப்பதால் எரியூட்டு இடத்தில் மழை காலத்தில் நீர் நிரம்பி இருப்பதினால் குறித்த இடத்தை உயரமான முறையில் அமைத்து மழைக்காலத்தில் மக்கள் சிரமமின்றி இறுதி கடமைகளை செய்வதற்கு உரிய நடவடிக்கைகள் கடந்த 6 மாதங்களாக செய்து வருவதாக கூறினார்..
இனிவருங்கலத்தில் மேலும் பல வசதிகள் செய்யப்பட்டு மக்கள் விருப்பத்திற்கு அமைவாக செய்யப்படும் என கூறினர்.