ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த வணிக கப்பல் ஒன்றிற்கு எரிபொருள் விநியோகிக்கும் போது எண்ணைக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்...
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்த வணிக கப்பல் ஒன்றிற்கு எரிபொருள் விநியோகிக்கும் போது எண்ணைக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 11 ஆம் திகதி மாலை 6 மணியளவில் இவ்வாறு எண்ணைக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து உடனடியாக எண்ணைக் கசிவை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹம்பாந்தோட்டை இன்டர்நெசனல் போர்ட் சர்விஸஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் ரவி ஜயவிக்ரம தெரிவித்துள்ளார்.