கம்பஹா பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அதே பாடசாலையைச் ...
கம்பஹா பகுதியில் உள்ள சர்வதேச பாடசாலையில் கல்வி கற்கும் 17 வயது மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் மாணவியை காரில் ஏற்றிச் சென்று, கார் தரிப்பிடம் ஒன்றில் வைத்து துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தகவல் தொழில்நுட்பம் கற்பிக்கும் 49 வயதான மாற்றுத்திறனாளி ஆசிரியர் என தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட மாணவியின் அத்தை லண்டனில் வசித்து வருகிறார். எனவே லண்டன் செல்வதற்காக பரீட்சையில் தோற்ற சில புத்தகங்களைப் படிக்க வேண்டும், அவற்றை கொழும்பிலேயே பெறலாமென கூறிய ஆசிரியர், மாணவியை ஏமாற்றி கொள்ளுப்பிட்டிக்கு தனது காரில் அழைத்துச் சென்றுள்ளார்.
சந்தேக நபர் மாணவியை காரின் முன் இருக்கையில் உட்கார வைத்து அழைத்து சென்றுள்ளார்.
பின்னர், கிம்புலாவல வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி, மாணவியை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மாணவி முல்லேரியா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரி சன்ன பெரேரா முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவ பரிசோதனையில் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.