நிதி அமைச்சர் என்ற ரீதியில் அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதும் சுபீட்சத்தின் நோக்கை நனவாக்க ஒத்துழைப்பு வழங்குவதும் ...
நிதி அமைச்சர் என்ற ரீதியில் அரசாங்கத்தின் முன்னுரிமைகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதும் சுபீட்சத்தின் நோக்கை நனவாக்க ஒத்துழைப்பு வழங்குவதும் தனது முதன்மைக் கடமையாகும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (11) இடம்பெற்ற முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு அர்ப்பணிப்புடன் செயற்பட தான் ஒருபோதும் பின்னிற்க போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தை போன்று எதிர்காலத்திலும் மக்களுக்காகவும் நாட்டிற்காகவும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.