இலங்கையில் ஏறத்தாழ 65வீதத்திற்கும் மேற்பட்ட இறப்புக்களுக்குக் காரணம் தொற்றாத நோய்களான மாரடைப்பு, நீரிழிவு, உயர் குருதி அமுக்கம், கொலஸ்ரோல்,ப...
இலங்கையில் ஏறத்தாழ 65வீதத்திற்கும் மேற்பட்ட இறப்புக்களுக்குக் காரணம் தொற்றாத நோய்களான மாரடைப்பு, நீரிழிவு, உயர் குருதி அமுக்கம், கொலஸ்ரோல்,புற்றுநோய் மற்றும் சுவாச நோய்கள் என்பனவே என்பது யாவரும் அறிந்ததே.
இந்த நோய்களுக்கான பிரதான காரணிகளாக உடற்பயிற்சி இன்மை, உடற்பருமன் அதிகரிப்பு என்பவற்றுடன் பொருத்தமற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் அல்லது பிழையான இணவுப்பழக்க வழக்கங்கள் ,புகையிலைப் பாவனை (புகைத்தல், வெற்றிலை மெல்லுதல், மதுபானம் பாவித்தல்) என்பவற்றைக் குறிப்பிடலாம். எனவே மக்கள் சுகதேகிகளாக வாழ்வதற்கு மேற்குறிப்பிட்ட காரணிகளைத் தவிர்ப்பதுடன் உடற் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல், உளம் சார்ந்த நன்மைகளை பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை அனைவரும் பெற்றுக் கொள்ள முடியும்
மனிதனின் மகிழ்ச்சியான, நிம்மதியான வாழ்வுக்கு உடல் ஆரோக்கியமே இன்றியமையாதது ஆகும். ஆரோக்கியமாக வாழ்வுக்கு சத்தான, தூய்மையான உணவுகள், மனப்பதற்றம் அற்ற வாழ்க்கை, உடற்பிற்சி போன்ற பல விடயங்கள் அவசியமாகின்றன.
உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் இல்லாதவர்கள் அல்லது நேரம் ஒதுக்க முடியாதவர்கள் குறைந்த பட்சம் சிறு தூரங்களுக்கு எங்காவது செல்லும் போது நடந்து செல்லல், துவிச்சக்கர வண்டியில் செல்லுதல், இயலுமானவர்கள் மாடிகளில் ஏறும் போது படிகளைப் பயன்படுத்துதல், முற்றம் கூட்டல் , தோட்டம் செய்தல் போன்ற வேலைகளிலாவது ஈடுபட முடியும்.இவ்வாறான வேவைகளில் ஈடுபடுவது ஒரு உடற் பயிற்சியிலும் ஈடுபடாமல் இருப்பதை விடச் சிறந்ததாகக் கொள்ளப்படுகிறது.
தற்போதைய நாட்களில் இலங்கையில் கொவிட்19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகம். பல கொரோனா தொற்றாளர்கள் முற்றாகக்குணமடைந்தும் சிலர் இறந்தும் உள்ளனர். உலகளாவிய ரீதியில் கொரோனா நோயை 100% குணப்படுத்த கூடிய அங்கீகரிக்கப்பட்ட மருந்து இன்று வரை கண்டுபிடிக்கப் படவும் இல்லை.
அப்படி என்றால் மக்கள் எவ்வாறு குணமடைகின்றார்கள்? கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு கைகளை அடிக்கடி கழுவுதல், போதிய அளவு நீர் ஆகாரம் எடுத்தல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை ,பானங்களை உட்கொள்ளுதல், முக்கியமாகஉடற்பயிற்சி செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இந்த வேளையில் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிப்பதாலே தான் கொரோனா நோயாளிகள் குணமடைகின்றனர்.
அப்படியானால் ஏன் மற்றவர்கள் மரணமடைகின்றார்கள்? ஆரம்பத்தில் கூறிய நாட்பட்ட நோய்கள் அதாவது நீரிழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய்கள், சிறுநீரக நோய்கள், ஈரல் நோய்கள், புற்றுநோய்களாலும்
சிலருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டு விட்டதே என்ற பயத்தினால் ஏற்பட்ட மனஅழுத்தமும் ,அதிக குருதி அமுக்கமும் , ேஹார்மோன் மாற்றம் மற்றும் சிக்கல் இல்லாத இருதய நோயாளர்களாக உள்ள சில நபர்களுக்குச் சடுதியான மாரடைப்பு ஏற்பட்டும் மரணங்கள் அதிகரிக்கின்றதாம்.
இவற்றை விட பூரண ஆரோக்கியம் கொண்டவர்கள் கூடக் கொரோனா தொற்றினால் மரணம் ஏட்படலாம். இது ஏன்?
கொவிட்19 வைரசுக்கு எதிராக நமது உடம்பில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தியில் உள்ள இரசாயன பதார்த்தங்களின் சிக்கல்கள் காரணமாக உடம்பிலுள்ள இரத்தக் குழாய்களில் அசாதாரண குருதி உறைவதால் ஆகும். இந்தக் குருதி உறைதல் பொதுவாக நுரையீரலில் உள்ள இரத்தக் குழாய்களில் ஏற்படுகின்றது. இந்த நிலைமை ஏற்படும் போது சில மருந்துகள் மூலமும், செயற்கை சுவாசம் வழங்குவதன் மூலமும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிலவேளை இந்த இரத்தம் உறைதல் அதிகமாக இருந்தால் சிகிச்சை பலனளிக்காது.
அதிகமான கொவிட் 19 மரணங்கள் தொற்றாநோய்கள் கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நேரங்களில் நிகழ்ந்துள்ளன. ஆகவே இந்த கொரோனா தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க வேண்டும் எனில் சுகாதார பழக்க வழக்கங்களை பேணி நடப்பதோடு, தொற்றா நோய்களை கட்டுப்பா ட்டுக்குள் வைத்திருக்கவும் உடற்பயிற்சி செய்தலைப் பழக்கமாக்கிக் கொள்ளவும் வேண்டும்.
Cherry
Proprietor of Northern Dance Fit,
Internationally Certified Zumba Instructor &
Professional Nurse