இலங்கையில் இதுவரை சுமார் 45,000 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வி...
இலங்கையில் இதுவரை சுமார் 45,000 சிறுவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் நளீன் கிதுல்வத்த இதை தெரிவித்துள்ளார்.
இவர்களில் 14 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நிலையில், குழந்தைகளுக்கு இடையில் மிகவும் வேகமாக கொவிட் தொற்று பரவி வருவதாகவும், ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் கொவிட் நோயாளர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள வார்ட்டுகள் நிரம்பி உள்ளதாகவும் வைத்தியர் நளீன் கிதுல்வத்த கூறியுள்ளார்.