தற்போதைய சூழ்நிலையில் பயணத்தடைக்கு அப்பாற்பட்ட தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனையடுத்து,...
தற்போதைய சூழ்நிலையில் பயணத்தடைக்கு அப்பாற்பட்ட தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, நாட்டில் பயணத்தடையை கடுமையாக அமுல்படுத்துவதா அல்லது முழு ஊரடங்கு அமுல்படுத்துவதா என்பது தொடர்பில் இன்று (13) வெள்ளிக்கிழமை நடைபெறும் கொரோனா ஒழிப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக அறியமுடிகிறது.
எவ்வாறாயினும், நாட்டில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்து வரும் நிலையில், 100இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் நாளாந்தம் பதிவாகிவரும் பின்னணியில் இன்றைய கூட்டமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக கருதப்படுகிறது.