வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் யாழ்ப்பாணம் - தெல்லிப்பளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - அளவெட்டி, நாகினாவத்த...
வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் யாழ்ப்பாணம் - தெல்லிப்பளைப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - அளவெட்டி, நாகினாவத்தை பகுதியில் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரே நேற்று திங்கட்கிழமை இரவு கைது செய்யப்பட்டு்ள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளில் பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 2 வாள்கள் மற்றும் சந்தேகநபரால் கொள்ளையிடப்பட்ட இலக்க தகடற்ற இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஆகியனவும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.