இலங்கை சக்கரை நிறுவனத்தினால் நாடளாவியில் உள்ள அனைத்து சதொச, கூட்டுறவு மற்றும் அரச விற்பனை நிலையங்களுக்கு இன்று (30) முதல் சீனி விநியோகிக்கு ...
இலங்கை சக்கரை நிறுவனத்தினால் நாடளாவியில் உள்ள அனைத்து சதொச, கூட்டுறவு மற்றும் அரச விற்பனை நிலையங்களுக்கு இன்று (30) முதல் சீனி விநியோகிக்கு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்ச ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் எதிர்வரும் புதன் கிழமை முதல் குறித்த விற்பனை நிலையங்கள் ஊடாக 130 ரூபாவிற்கு சீனி விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனால் நாட்டு மக்கள் அதிக விலை கொடுத்து சீனியை கொள்வனவு செய்ய வேண்டாம் என அவர் தெரிவித்துள்ளார்.