கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடு முழுமையாக முடக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார். எனினும், பயணக் கட்டுப்பாடு கட...
கொரோனா பரவலுக்கு மத்தியில் நாடு முழுமையாக முடக்கப்படாது என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார்.
எனினும், பயணக் கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
கொவிட்−19 தடுப்புக்கான ஜனாதிபதி செயலணிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் இன்று (13) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இன்று மாலை தெளிவூட்டவுள்ளதாகதெரிவிக்கப்படுகின்றது.